என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Sunday, September 8, 2013

2020ல் ஒலிம்பிக் போட்டி: டோக்கியோ நகரில் நடக்கிறது

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் (ஐஓசி) 125-வது கூட்டம் ஆர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடக்கிறது. நேற்றைய கூட்டத்தில் 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நகரத்தை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.
 http://www.dinakaran.com/data1/DNewsimages/Tamil-Daily-News_43082392216.jpg

இதில், இறுதி வாய்ப்பை பெற்ற டோக்கியோ, இஸ்தான்புல் மற்றும் மேட்ரிட் நகரங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. முதல் சுற்று வாக்கெடுப்பில் மேட்ரிட் நகரம் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது சுற்று வாக்குப்பதிவில், இஸ்தான்புல், டோக்கியோ இடையே கடும் நெருக்கடி காணப்பட்ட போதிலும், இறுதியில் ஜப்பான் தலைநகர் டோக்கியோ 60 வாக்குகள் பெற்று, 2020ல் ஒலிம்பிக்கை நடத்தும் வாய்ப்பை தட்டிச் சென்றது. இஸ்தான்புல் நகருக்கு 36 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதன் மூலம், ஜப்பான் நான்காவது முறையாக ஒலிம்பிக் போட்டியை நடத்துகிறது.
அணு உலை விபத்து காரணமாக, 2020ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முன்னிலையில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே விளக்கமளித்தார்.

Sunday, August 11, 2013

ஹாலிவுட் போகும் ரஜினியின் கோச்சடையான்..

மும்பை: கோச்சடையான் ஒரு சர்வதேச படம் என்று தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.
Kochdaiyaan Goes Hollywood

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்துள்ள படம் கோச்சடையான். இந்த படம் மூலம் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். முதன் முதலாக தமிழ் படத்தில் நடித்துள்ள இந்தி நடிகை தீபிகா இந்த படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார். ...

Thursday, June 20, 2013

ராஜ்யசபா தேர்தல்.. கனிமொழியின் வெற்றியை தீர்மானிக்கப் போவது ஜெயலலிதாவே...எப்படி

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளரான கனிமொழியின் வெற்றியை தீர்மானிக்கக் கூடிய மிக துருப்புச் சீட்டு என்பது அதிமுக பொதுச்செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் கையில்தான் இருக்கிறது என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி.க்கள் இடத்துக்கான தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற இருக்கிறது. இதில் 5 வேட்பாளர்களின் வெற்றி உறுதியாகிவிட்டது.
ராஜ்யசபா தேர்தல்.. கனிமொழியின் வெற்றியை தீர்மானிக்கப் போவது ஜெயலலிதாவே...எப்படி?

 6வது எம்.பி. இடத்துக்கு திமுகவின் வேட்பாளராக கனிமொழியும் தேமுதிகவின் வேட்பாளராக இளங்கோவனும் களத்தில் இருக்கின்றனர். திமுக வேட்பாளர் கனிமொழியை 2 எம்.எல்.ஏக்கள் கொண்ட மனித நேய மக்கள் கட்சி ஆதரிக்கிறது. இதனால் திமுகவுக்கு தற்போதைய ஆதரவு எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது. கனிமொழியையே பாட்டாளி மக்கள் கட்சியும் ஆதரிக்கக் கூடும் எனத் தெரிகிறது. அப்படியான ஒருநிலையில் கனிமொழிக்கான ஆதரவு 28ஆக இருக்கும். தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை காங்கிரஸ் ஆதரிககக் கூடும் என்று கூறப்படுகிறது. தற்போதைய காங்கிரஸ் கட்சியானது ராகுல் காந்தியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் காங்கிரஸ் ஆதரிக்கலாம் என்று வாதிடப்படுகிறது.

 அப்படியே காங்கிரஸ் ஆதரிக்கும் போது 22+5= 27 என்ற ஒரு நிலை உருவாகலாம். இந்தச் சூழலில் கனிமொழி வெல்ல வேண்டுமா? தேமுதிகவின் இளங்கோவனை ஜெயிக்க வைத்து ‘அதிருப்தி' எம்.பி.யாக தம் வசம் வைத்துக் கொள்வதா? என்பதை தீர்மானிக்கும் இடத்தில் ஜெயலலிதாவே இருக்கிறார்...ஏனெனில் அவர் வசம் 7 தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உள்ளனர். கனிமொழி ஜெயிப்பதால் தமக்கு ஒரு பயனும் இல்லை. .ஆனால் தேமுதிகவின் வேட்பாளரை ஜெயிக்க வைத்து ஒரு அதிருப்தி எம்.பி.யை உருவாக்கி வைப்பதால் தமக்கு லாபம் என ஜெயலலிதா கருதினால் அந்த 7 தேமுதிக அதிருப்தி வேட்பாளர்களையும் தேமுதிக வேட்பாளருக்கே வாக்களிக்க சொன்னால் இளங்கோவன் வெற்றி பெற்றுவிடுவார் எனவும் கூறப்படுகிறது. ஆக கனிமொழி வெல்லப் போவது ஜெயலலிதாவின் கையில்



Wednesday, June 19, 2013

சினிமாவுக்கு வருவதற்கு முன் தமிழ் நடிகர்கள் செய்த தொழில்கள்

நமது திரைப்பட கலைஞர்கள், சினிமாவுக்கு வருவதற்கு முன் பலர். பல்வேறு

தொழில்களில், பணிகளில் ஈடுப்பட்டிருக்கிறார்கள்.யார் யார் எந்தெந்த 

தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள்.





ஜெமினி கணேசன்
போட்டோ உதவி பேராசிரியர்

ஏ.வி.மெய்யப்பன்
சைக்கிள் கடை
வி.எஸ்.ராகவன்
பத்திரிகையாளர்

ராகவன்
சுங்க இலாகா அதிகாரி
ஆனந்தராஜ்
சாராய வியாபாரம்

சிவக்குமார்
ஓவியர்
ரஜினிகாந்த்
பஸ் கண்டக்டர்

ஜெய்கணேஷ்
காய்கறி வியாபாரம்
நாகேஷ்
ரயில்வே குமாஸ்தா

கே.ஆர்.ஜி.
சிட்பண்ட்ஸ்
பாண்டியன்
வளையல் கடை
விஜயகாந்த்
அரிசி கடை 

ராஜேஷ்
பள்ளி ஆசிரியர்
ஆர்.சுந்தர் ராஜன்
-பேக்கிரி கடை 

பீட்டர் செல்வக்குமார்
ரயில்வே அதிகாரி
பாக்யராஜ்
ஜவுளிக்கடை 

அஜீத்
டூ வீலர் மெக்கானிக்
ரகுவரன்
உணவு விடுதி 

பூர்ணம் விஸ்வநாதன்
வானொலி அறிவிப்பாளர்
அமோகா
ஹோட்டல் போட்டோசப்ஷனிஸ்ட் 

பாரதிராஜா
மலேரியா ஒழிப்பு இன்ஸ்பெக்டர்
டெல்லி கணேஷ்
ராணுவ வீரர் 

மேஜர் சுந்தர்ராஜன்
அக்கவுண்டென்ட்
பாலச்சந்தர்
அக்கவுண்டென்ட் 

புலவர் புலமைப்பித்தன்
பள்ளி தலைமையாசிரியர்
கே.விஜயன்
ரயில்வே ஒர்க்ஷாப் ஊழியர் 

சாருஹாசன்
வக்கீல்
விசு
டி.வி.எஸ்.பணியாளர் 

தலைவாசல் விஜய்
ஓட்டல் பணியாளர்
மோகன்
வங்கி ஊழியர் 

ராஜீவ்
ஓட்டல் கேட்டரிங்
எஸ்.வி.சேகர்
மேடை நாடக ஒலி அமைப்பாளர் 

தியாகராஜன்
இசைத்தட்டு விநியோக பிரதிநிதி
பாண்டியராஜன்
பார்க்காத வேலை,தொழில் இல்லை 

ஏ.எஸ்.பிரகாசம்
போட்டோ பேராசிரியர்
பெரியார்தாசன்
போட்டோ பேராசிரியர் 

கவிஞர் வைரமுத்து
சட்ட மொழிபெயர்ப்பு துறையில் மொழி பெயர்ப்பாளர்
முக்தா சீனிவாசன்
அலுவலக டைப்பிஸ்ட் 

நடிகை காஞ்சனா
ஏர் ஹோஸ்டஸ்
கமலாகாமேஷ்
மெல்லிசை பாடகி 

வடிவுக்கரசி
ஹோட்டல் போட்டோசப்னிஸ்ட்
சுஹாசினி
உதவி ஒளிப்பதிவாளர் 

சரத்குமார்
பத்திரிகை அலுவலக நிர்வாகம்
இந்து
தொலைக்காட்சி அறிவிப்பாளர் 

ஃபாத்திமா பாபு
தொலைக்காட்சி அறிவிப்பாளர்
டைரக்டர் வசந்த்
குமுதம் பத்திரிகை நிருபர் 

டைரக்டர் கார்வண்ணன்
ஆட்டோ டிரைவர்
தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன்
லேடீஸ் ஹாஸ்டல் வாட்ச்மேன் 

டைரக்டர் சேரன்
தொழிலாளி (சிம்சன்)
தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினம்
விஜயசாந்தியின் மேக்கப்மேன் 

தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன்
இங்கிலிஸ் எலக்ட்ரிகல் வாட்ச்மேன்
பாடலாசிரியர் பழனிபாரதி
ஆனந்தவிகடன் போட்டோப்போர்ட்டர்

அன்று அதிமுகவுக்கு இந்திரா.. இன்று தேமுதிகவுக்கு சோனியா...

சென்னை: ராஜ்யசபா தேர்தலை முன்வைத்து நடைபெறும் அரசியல் பேரங்கள் தமிழக அரசியலை தலைகீழாகப் புரட்டி போட்டுவிடுமோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி நடத்துகிற கண்ணாமூச்சி ஆட்டம் 35 ஆண்டுகளுக்கு முந்தைய எம்.ஜி.ஆர்- இந்திரா காந்தி காலத்தை நினைவுபடுத்தாமல் இல்லை. தேமுதிக, தனித்தே போட்டியிடுவோம் என்று சொல்லி வந்த காலத்தில் இருந்தே அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி விரும்பி வந்தது. திமுக- காங்கிரஸ் அணியில் தேமுதிக இணைந்தால் பலமிக்கதாக இருக்கும் என்றெல்லாம் கூறப்பட்ட நிலையில் அதிமுகவுடன் கை கோர்த்தது தேமுதிக. பின்னர் அதிமுகவுடனான உறவை முறித்துக் கொண்டு வெளியேறியது தேமுதிக. அதேபோல் திமுக- காங்கிரஸ் இடையேயான உறவும் முறிந்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைவிட்டு வெளியேறியது திமுக. இந்நிலையில் ராஜ்யசபா தேர்தல் வந்துள்ளது.

 23 எம்.எல்.ஏக்களைக் கொண்டுள்ள திமுக, 22 எம்.எல்.ஏக்களைக் கொண்ட தேமுதிக, 5 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் ஆதரவுடன் ஒரு எம்.பி. இடத்தைப் பிடித்துக் கொள்ள முயற்சித்தது. இந்த முயற்சி வெற்றி பெறவில்லை. இருப்பினும் காங்கிரஸ், பாமக, மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆதரவுடன் எப்படியும் வென்றுவிடுவது என்ற முடிவோடு திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தார். ஆனால் புதிய திருப்பமாக தேமுதிகவும் களத்துக்கு வந்தது. தேமுதிகவும் காங்கிரஸ் கட்சி ஆதரவு எங்களுக்கு இருக்கிறது என்று தம்பட்டம் அடித்தது. 
அன்று அதிமுகவுக்கு இந்திரா.. இன்று தேமுதிகவுக்கு சோனியா? திமுகவின் எதிர்காலம்?


இதனால் பெரும் குழப்பம் உருவானது. திமுக தலைவர் கருணாநிதியை மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் நேரில் திடீரென சந்தித்ததே காங்கிரஸின் ஆதரவைத் தெரிவிக்கத்தான் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது அதே ஜெயந்தி நடராஜன் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுகவுக்கு ஆதரவு அளிப்பது பற்றி காங்கிரஸ் மேலிடம் முடிவெடுக்கும் என்று அறிவித்திருக்கிறார். மேலும் திடீரென தேமுதிக எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு படையெடுத்துச் சென்று ஆதரவு கோரியுள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சி கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுகிறதோ என்ற சந்தேகம் திமுகவுக்கு எழுந்துள்ளது.


அத்துடன் தேமுதிக ஆதரவைக் கோரி நேரில் வந்திருக்கும் நிலையில் இந்த உறவை இறுகப் பற்றிக் கொண்டு லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளலாம் என்பதே காங்கிரஸ் நிர்வாகிகள் பலரது கருத்தாக இருக்கிறது. இதனால் காங்கிரஸ் மேலிடமும் தமிழகத்தில் வழக்கமாக பின்பற்றுகிற வளர்ந்து வருகிற கட்சியை அணைத்துக் கொண்டு வளர்த்துவிட்டு திமுகவை தனிமைப்படுத்துவது என்ற் பார்முலாவை கடைபிடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அதாவது 1972ல் திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டு அதிமுக உதயமானது. 1973ஆம் ஆண்டு திண்டுக்கல் லோக்சபா இடைத்தேர்தலிலும் அடுத்த ஆண்டு கோயம்புத்தூர் சட்டசபை இடைத் தேர்தலிலும் வெற்றி பெற்று அது வேர்பிடித்தது. பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டத் தொடங்கியது. அவசரநிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்ட போது அதிமுகவும் காங்கிரசும் நெருங்கி வந்தன. 1976ஆம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டினால் திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. பின்னர் 1980களில் அதிமுக- காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்பட அந்த இடத்தை திமுக நிரப்பி லோக்சபா தேர்தலில் பெரும் வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். அரசும் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. ஆனால் அதன் பின்னர் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் நரசிம்மராவ் காலம் வரையிலும் கூட அதிமுக- காங்கிரஸ் கூட்டணி "இயற்கையான கூட்டணி" என்றே வலம் வந்தது. அதிமுகவில் பிளவு ஏற்பட்டதால் இடையில் திமுக ஆட்சியைக் கைப்பற்ற முடிந்ததே தவிர பெரும் சோதனைக்காலமாகவே அக்கட்சிக்கு இருந்து வந்தது. பின்னர் மத்தியில் நிலையான வலுவான ஒரு கட்சி ஆட்சி அமைவது சாத்தியம் இல்லாமல் போகவே காங்கிரஸ், பாஜக அணிகளில் திமுக மாறி மாறி அமர்ந்து விலகி வருகிறது. தற்போது தமிழக அரசியலில் 10% வாக்குகளுடன் வளர்ந்து வரக்கூடிய கட்சியாக தேமுதிக இருக்கிறது. திமுகவை என்றுமே ராகுல் காந்தி மதிப்பது இல்லை என்பது பொதுவான கருத்து தற்போது காங்கிரஸில் ராகுலின் கை ஓங்கியுள்ள நிலையில் திமுகவை ஓரம்கட்டிவிட்டு தேமுதிகவை வளைத்துப் போடவே அக்கட்சி விரும்புவதாக சொல்லப்படுகிறது. இதற்கான வலுவான அடித்தளமாக ராஜ்யசபா தேர்தல் அமைந்திருக்கிறது என்பது நிதர்சனம்.. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தேமுதிகவுடன் "இயற்கையான கூட்டணி" அமைத்துக் கொண்டு இனிவரும் காலத்தில் தமிழகத் தேர்தல்களை எதிர்கொள்ளலாம் என்ற நம்பிக்கை காங்கிரஸிடம் மேலோங்கியே இருக்கிறது. அதாவது அன்று எம்.ஜி.ஆரின் அதிமுகவை காங்கிரஸ் தலைவராக இந்திரா காந்தி மதித்து வளைத்துப் போட்டார். இன்று கருப்பு எம்.ஜி.ஆர். என அழைத்துக் கொள்ளும் விஜயகாந்தின் தேமுதிகவை காங்கிரஸ் தலைவரான சோனியாவும் அவரது மகன் ராகுலும் மதித்து வளைத்துப் போடவே சாத்தியம் அதிகம் எனப்படுகிறது. அப்படி ஒன்று நிகழ்ந்தால் காங்கிரஸ் கட்சியை ஏச்சுகளுக்கும் பேச்சுகளுக்கும் மத்தியில் விழுந்து விழுந்து ஆதரித்த திமுகவின் எதிர்காலம் என்னவாகும்? என்பது பெரும் கேள்வி

Tuesday, June 18, 2013

தில்லு முல்லு

நடிகர் : சிவா
நடிகை :இஷா தல்வார்
இயக்குனர் :பத்ரி
இசை :எம்.எஸ்.விஸ்வநாதன், யுவன் சங்கர் ராஜா
ஓளிப்பதிவு :லஷ்மண்
வேலைவெட்டி இல்லாமல் தன்னுடைய தங்கை மற்றும் மாமாவுடன் சென்னையில் வசித்துவரும் சிவாவின் அப்பா, தவறான ஒருவருக்கு சாட்சி கையெழுத்துப் போடப்போய் தன்னுடைய வீட்டையே வங்கிக்கு தாரைவார்த்துக் கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்படுகிறது.

இதனால் கடன்காரனான சிவா, கடனை அடைக்க ஒரு வேலைக்கு செல்ல முடிவெடுக்கிறார். அவருடைய மாமாவான இளவரசு, மிகவும் கண்டிப்புடன் இருக்கும் தன்னுடைய நண்பன் பிரகாஷ்ராஜின் மினரல் வாட்டர் கம்பெனியில் சிவாவை சேர்த்துவிட முடிவெடுக்கிறார்.

ஆனால், பிரகாஷ் ராஜுக்கோ வேலையில் சேருவதற்கு யாரும் சிபாரிசு செய்வது பிடிக்காது. மேலும் முருக பக்தரான அவருக்கு, அவருடைய பாணியிலேயே சென்று எப்படியாவது வேலையைப் பெற்றுவிடவேண்டும் என்று ஐடியா கூறுகிறார். அதன்படி, தனக்கு கொஞ்சமும் பழக்கமில்லாத பக்தி வேடமணிந்து இண்டர்வியூவுக்கு செல்கிறார் சிவா. தன்னுடைய பெயருக்கு விளக்கம் சொல்லும்விதமே பிரகாஷ் ராஜூக்கு சிவாவை பிடித்துவிட உடனே வேலைக்கு அமர்த்துகிறார்.

வேலையில் சேர்ந்தவுடன் ஒருநாள் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதற்காக சிவாவின் அம்மா பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டதாக சிவாவின் நண்பர்கள் அலுவலகத்திற்கு போன் செய்ய, சிவாவோ இல்லாத அம்மாவை, இருப்பதாக பொய் சொல்லிவிட்டு நண்பர்களோடு சேர்ந்து மேட்ச் பார்க்க சென்றுவிடுகிறார்.

அப்போது, நண்பரின் விருப்பத்திற்காக மேட்ச் பார்க்க வரும் பிரகாஷ் ராஜ் மைதானத்தில் சிவா இருப்பதை பார்த்துவிடுகிறார். மறுநாள் அலுவலகத்தில் வந்து சிவாவிடம் கேட்க, சிவாவோ அது தான் இல்லை தன்னுடைய தம்பி கங்குலி கந்தன் என்று சொல்கிறார். நாங்கள் இருவரும் இரட்டையர்கள். தம்பி கராத்தே மாஸ்டர் என்றும் கூறுகிறான்.

மேலும், இதற்கு தன்னுடைய நண்பன் சத்யன் டபுள் ஹீரோவாக நடிக்கும் படமொன்றின் டெக்னிக்கை பயன்படுத்துகிறார். அதாவது சாதாரண கண்களோடு வந்தால் அண்ணன், பூனைக் கண்களோடு வந்தால் அது தம்பி என்று பிரகாஷ் ராஜிடம் சொல்கிறார். இதை உண்மை என்று நம்புகிறார் பிரகாஷ் ராஜ்.

இந்நிலையில் தன்னுடைய மகளான இஷா தல்வாருக்கு கராத்தே பயிற்சி அளிக்க தம்பியை தனது வீட்டுக்கு வரச்சொல்லுமாறு அண்ணன் சிவாவிடம் கூறுகிறார் பிரகாஷ்ராஜ். அவருடைய பேச்சுக்கு எதிர்பேச்சு பேசமுடியாத சிவா, தனது நண்பன் சத்யனிடமிருந்து கராத்தே ஆடையையும், பூனை கண்களுக்கான காண்டக்ட் லென்ஸும் வாங்கி போட்டுக் கொண்டு பிரகாஷ்ராஜ் வீட்டிற்கு சென்று பயிற்சி கொடுக்கிறார்.

இஷா தல்வாருக்கு பயிற்சி கொடுக்கும் தம்பி சிவாவை இஷா தல்வார் காதலிக்கிறார். மறுமுனையில், சிவா இரட்டையர்கள்தானா? என்ற சந்தேகம் பிரகாஷ்ராஜூக்கு தொடர்ந்து இருந்து வருகிறது. இதை கண்டறிவதற்கு தனியாக ஒரு டிடெக்டிவை வைக்கிறார் பிரகாஷ் ராஜ். தன்னுடைய தில்லு முல்லுகளால் அதிலிருந்து எஸ்கேப் ஆகிறார் சிவா.

உடனே, தன்னை நல்லவனாக காட்டிக்கொள்ளும் பொருட்டு பிரகாஷ் ராஜிடம் சென்று அண்ணன்- தம்பி இருவருமே வேலையை விட்டுவிடுவதாக கூறுகிறார். ஆனால், சிவாவின்  தில்லு முல்லுகளை அறியாத பிரகாஷ் ராஜ், அவரை வேலையிலிருந்து வெளியே அனுப்ப மறுக்கிறார். தன்னுடைய தவறுக்கு சிவாவின் அம்மாவை சந்தித்து மன்னிப்பு கோரப் போவதாக பிரகாஷ் ராஜ் கூறியதும் சிவா சற்று தள்ளாடிப் போகிறார்.

உடனே, வீட்டுக்கு சென்று வீட்டு வேலை செய்யும் கோவை சரளாவை சீக்கிரம் சீக்கிரமாக அம்மா வேடம் போட்டு அமரவைக்கிறார். சிவா வீட்டுக்கு செல்லும் பிரகாஷ் ராஜ் கோவை சரளாவின் பக்திமயமான வேஷத்தை கண்டு மெய்சிலிர்த்துப் போகிறார். இதன்மூலம் சிவா மீது பிரகாஷ்ராஜ் வைத்திருந்த மதிப்பு மேலும் இருமடங்காகிறது. இந்நிலையில் தம்பி சிவா- இஷா தல்வாரின் காதல் பிரகாஷ் ராஜூக்கு தெரியவருகிறது. அவர்களை பிரிக்க நினைக்கிறார். அதே நேரத்தில் அண்ணன் சிவாவிற்கு தன்னுடைய மகளை கட்டிக் கொடுக்க முடிவெடுக்கிறார்.

இறுதியில் சிவா தன்னுடைய தில்லுமுல்லுகளை பிரகாஷ் ராஜிடம் எடுத்துக்கூறினாரா? இஷா தல்வாரை கரம்பிடித்தாரா என்பதே மீதிக்கதை. 

ஏற்கெனவே ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘தில்லு முல்லு’ படத்தின் ரீமேக்தான் இந்தப்படம். அப்போது இப்படத்தை எடுத்தபோது, ஆக்சன் ஹீரோவாக இருந்துவந்த ரஜினி, காமெடி வேடத்திற்கு பொருந்துவாரா? என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. அந்த விமர்சனங்களையெல்லாம் கே.பாலச்சந்தர் தவிடுபொடியாக்கினார். தற்போது, இப்படத்தில் ரஜினியின் நடிப்புக்கு சிவா ஈடுகொடுப்பாரா? என்ற சந்தேகம் எழுந்தது. அதையும் தவிடுபொடியாக்கிறது இந்த சிறிய டீம்.

ஒரே உருவத்தில் அண்ணன்- தம்பி என இரண்டு வேடங்களில் நடித்துள்ள சிவாவின் பலமே அவருடைய அசாதாரணமான முகபாவனைகள்தான். தன்னுடைய முதலாளி ‘பேஸ்புக்ல இருக்கீங்களா?’ என்று கேட்டதும், பதிலுக்கு இவர் ‘இல்ல திருவான்மியூர்ல இருக்கிறேன்’ என்று சொல்வதாகட்டும், ‘காந்திக்கு அப்புறம் டிரெஸ்-க்காக கலாய் வாங்குவது நானாகத்தான் இருக்கும்’ என்று சொல்வதாகட்டும், சிவா சொல்லும்போது மட்டுமே சிரிப்பு வருகிறது. படம் முழுவதும் பயங்கர கைதட்டல் பெறுவது இவர் பேசும் வசனங்கள்தான். சிவாவுக்கு ‘அகில உலக சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் கொடுத்ததில் தவறு ஒன்றும் இல்லை என்றே சொல்லலாம்.

தீவிரமான முருக பக்தராக வருகிறார் பிரகாஷ் ராஜ். சிவா செய்யும் தில்லு முல்லுகளை அறியாத அப்பாவியான முகம். குங்பு சண்டையில் ரவுடிகளை வெளுத்து வாங்கிவிட்டு, ‘பெத்தவங்க பேச்சை இப்ப உள்ள பிள்ளைங்க எங்க கேட்கிறாங்க’ என்று அசால்ட்டாக பேசி, பெரிய கைதட்டல்களை பெற்றுவிடுகிறார்.

வாயைத் திறந்தாலே சென்னை பாஷையில் வெளுத்துக்கட்டும் கோவை சரளாவுக்கு, அம்மா என்ற பதவியை கொடுத்து, வாயில் வேல் குத்தி ஊமையாக்கிவிட்டார்கள். இருந்தாலும், மைன்ட் வாய்ஸ்-ல் இவர் பேசும் வசனம் கலகலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நாயகி இஷா தல்வார் அழகு பதுமையாய் வந்து போயிருக்கிறார். அரை குறை ஆடையில் படம் முழுக்க கவர்ச்சியை வாரி வழங்கியிருக்கிறார். நாயகனைப் பற்றி ரவுடிகளிடம் இவர் பேசும் வீர வசனங்களில் வீரம் இல்லை.

சிவாவின் மாமாவாக வரும் இளவரசு, பிரகாஷ் ராஜிடம் மானேஜராக பணிபுரியும் மனோபாலா, நடிகராக வரும் சத்யன், ஆகியோரும் படத்தின் ஓட்டத்துக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

சிவாவின் தங்கையாக வரும் மோனிஷா பார்க்க அழகாக இருக்கிறார். இவருக்கு நடிப்பதற்குண்டான வாய்ப்பு குறைவே என்றாலும் தன்னுடைய பணியை செவ்வனே செய்திருக்கிறார்.

இதுவரையிலான படங்களில் வேஷ்டி, லுங்கி என சுற்றிக்கொண்டிருந்த சூரிக்கு இந்த படத்தில் பளபளக்கும் கண்ணாடி, ப்ளீச் போட்ட முடி, ஜீன்ஸ், டீஷர்ட் என மாடர்ன் இளைஞனாக அலைய விட்டிருக்கிறார்கள். இவரும், சிவாவின் தங்கையும் காதலிப்பதும், காதல் கூடுவதற்காக அவ்வப்போது நட்பு பற்றி சிவாவிடம் இவர் பேசும் வசனங்களும், சிவா அதற்கு கவுண்டர் வசனம் கொடுப்பதும் தியேட்டரில் விசில் பறக்கிறது.

படத்தின் கிளைமாக்சில் மாப்பிள்ளை கோலத்தில் என்ட்ரி ஆகிறார் சந்தானம். வழக்கம்போல் தன்னுடைய பஞ்ச் வசனங்களால் கடைசி 5 நிமிடங்களை மேலும் கலகலப்பூட்டியிருக்கிறார்.

படம் ஆரம்பம் முதல் கடைசி வரை காமெடியில் களைகட்டுகிறது. தன்னுடைய வசனங்களால் படம் முழுவதும் ரசிகர்களை சிரிக்க வைப்பதில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் பத்ரி. மிகப்பெரிய இயக்குனர்களின் படங்களை ரீமேக் செய்யும்போது, அந்த படத்தின் இயல்புக்கும், இயக்குனரின் புகழுக்கும் சிறிதும் களங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் ரொம்பவும் கவனம் செலுத்தியிருக்கிறார் இயக்குனர். இவருடைய வசனங்கள்தான் படத்திற்கு மிகப்பெரிய பலமே. 

முதன்முதலாக எம்.எஸ்.விஸ்வநாதனும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள். ‘தில்லு முல்லு’ பாடலுக்கு இருவரும் இணைந்து திரையில் தோன்றி நடனமும் ஆடியிருக்கிறார்கள். இவர்களுடைய இசையில் ’ராகங்கள் பதினாறு உருவான வரலாறு’ பாடல் கார்த்திக் குரலில் இனிமையாக ஒலிக்கிறது. மற்ற பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

லட்சுமணன் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் கண்களுக்கு இதமாய் காட்சியளிக்கின்றன. ப்ரவின், ஸ்ரீகாந்த் இருவருடைய எடிட்டிங் காட்சிகளின் கோர்வைக்கு உறுதுணையாய் இருக்கின்றன.

மொத்தத்தில் ‘தில்லு முல்லு’ சிரிப்பு வெடி...

தீயா வேலை செய்யணும் குமாரு.....

நடிகர் : சித்தார்த்
நடிகை :ஹன்சிகா மொத்வானி
இயக்குனர் :சுந்தர் சி.
இசை :சத்யா
ஓளிப்பதிவு :கோபி அமர்நாத்


பாரம்பரியமாக காதல் திருமணம் செய்து வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் சித்தார்த். ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் இவரால் மட்டும் காதலில் வெற்றி காண முடியவில்லை.

இவருக்கு காதல் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று துடிக்கும் இவரது அக்காக்கள் காதல் அனுபவத்தைப் பற்றி விளக்குகிறார்கள். மறுநாள் வேலைக்குப் போகும் சித்தார்த் அங்கு புதிதாக இவரது கம்பெனியில் வேலைக்கு சேரும் ஹன்சிகாவை கண்டதும் காதல் வயப்படுகிறார்.

அதே நிறுவனத்தில் பணிபுரியும் கணேஷ், ஹன்சிகாவுடன் நெருங்கி பழகுகிறார். இதைக்கண்ட சித்தார்த், எப்படியாவது ஹன்சிகா தன்னை காதலிக்க வேண்டும் என்று தனது அக்கா கணவரிடம் ஆலோசனைக் கேட்க, அதற்கு அவர் சந்தானத்தின் முகவரியைக் கொடுத்து ஹன்சிகாவை அடைவதற்காக தேவையான அனைத்து உதவிகளை செய்வார் என்று அனுப்பி வைக்கிறார்.

சந்தானத்தை சந்திக்கும் சித்தார்த், தனது நிலைமையை சொல்லி புலம்புகிறார். இதற்கு சந்தானம் பணம் வாங்கிக் கொண்டு ஆலோசனை வழங்குகிறார். இதிலிருந்து இவர்கள் இருவரும் செய்யும் கலாட்டாக்களில் திரையரங்கு சிரிப்பொலியில் அதிர்கிறது.

ஒரு கட்டத்தில் சித்தார்த்துக்கு சந்தானம் கொடுக்கும் ஐடியா, கணேஷ்- ஹன்சிகா இருவரும் காதலிப்பதற்கு காரணமாகிறது. இதனால் விரக்தியடைந்த சித்தார்த் தற்கொலை முயற்சிக்குச் செல்கிறார். மீண்டும் சந்தானம் அறிவுரை வழங்கவே கணேஷ் ஹன்சிகா காதல் முறிகிறது.

இந்த சூழலில் சந்தானத்தின் தந்திரமான ஆலோசனையால் ஹன்சிகா சித்தார்த் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். இருவரையும் சந்தானம் ஒன்றாக சேர்த்து பார்த்தவுடன் மனமுடைந்து காதலை பிரிக்க திட்டமிடுகிறார்.

இருவரையும் சந்தானம் ஏன் பிரிக்க நினைக்கிறார்? இவர் சதியில் இருந்து சித்தார்த்-ஹன்சிகா காதல் மீண்டதா? என்பது மீதிக்கதை.

கதாநாயகன் சித்தார்த், முதலில் சாதுவாக தோன்றி, பின்னர் சந்தானத்துடன் இணைந்தவுடன் பாவப்பட்ட முகத்துடன் அடிக்கும் லூட்டிகள் தியேட்டரில் சிரிப்பலைகளை ஏற்படுத்துகிறது.

ஹன்சிகா உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகவும் சிக்கென்றும் தோன்றுகிறார். கணேஷின் காதலை ஏற்றுக்கொண்டு பிறகு அதை பிரேக்-அப் செய்வது போன்ற காட்சிகள் சிறப்பு. அவரது கன்னக்குழியில் ரசிகர்களை விழச்செய்திருக்கிறார்.

மோக்கியாவாக வரும் சந்தானம் தான் கூறும் ஒவ்வொரு கருத்துக்களையும் லோக்கல் ஏரியா லாங்குவேஜை சொல்லி விளக்குவது திரையரங்கை அதிர வைக்கிறது. ''நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டையில் உள்ள நாய்க்குதான் கிடைக்கும் என்று இருந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது'' என்பது போன்ற ஆழ்ந்த கருத்துக்களை உள்ளடக்கிய வசனங்கள் எண்ணில் அடங்காதவை. எண்ணத்தை விட்டு நீங்காதவை.

ஹன்சிகாவை காதலிப்பவராக வரும் கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் மொட்டை பாஸ்கி, எப்.எம். பாலாஜி, விச்சு, சித்ராலட்சுமணன், டெல்லி கணேஷ், ஸ்ரீரஞ்சனி உள்பட அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை செம்மையாக செய்திருக்கிறார்கள்.

'கலகலப்பு' காமெடி படத்தைத் தொடர்ந்து சுந்தர்.சி கதை எழுதி இயக்கியிருக்கும் 'தீயா வேலை செய்யணும் குமாரு' படம் மூலம் தீப்பொறி கிளம்ப மற்றும் ஒரு நகைச்சுவை வெற்றிப்படத்தை தந்திருக்கிறார். படம் முழுக்க சந்தானத்தை பயன்படுத்தி திறன்பட காட்சிகளை அமைத்து படத்தில் தொய்வில்லாமல் கொண்டு சென்றிருக்கிறார். இதற்காக இவருக்கு ஒரு சபாஷ் போடலாம்!.

சத்யாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். கோபிஅமர்நாத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்கு குளிர்ச்சி.

'தீயா வேலை செய்யணும் குமாரு' மொத்தத்தில் சிரிப்பொலி.

எனது இந்தி படத்திற்கு சொந்த குரலில் டப்பிங் பேசினேன்: தனுஷ்

தமிழில் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ள நடிகர் தனுஷ், முதன் முறையாக இந்தியில் ஆனந்த் என்பவரின் இயக்கத்தில் 'ராஞ்ஜனா' என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்தப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இது தமிழில் 'அம்பிகாபதி' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. தமிழ் பதிப்பின் உரிமையை அபிராமி ராமநாதன் வாங்கியுள்ளார். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
எனது இந்தி படத்திற்கு சொந்த குரலில் டப்பிங் பேசினேன்: தனுஷ்
இந்த விழாவில் தனுஷ் பேசியதாவது:-

ஆடுகளம் படத்தைப் பார்த்த இயக்குனர் ஆனந்த், என்னை இந்தியில் நடிக்க அழைப்பு விடுத்தார். மொழிப்பிரச்சினை காரணமாக முதலில் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்தேன். இருந்தாலும், தொடர்ந்து அவர் வற்புறுத்தியதால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

இந்திப்பட உலகில் எனக்கு மரியாதை இருக்குமா என்ற அச்சம் முதலில் இருந்தது. ஆனால் மிகவும் மரியாதையுடன் என்னை நடத்தினார்கள். இந்த படத்திற்கு நானே இந்தியில் டப்பிங் பேசியிருக்கிறேன். படம் நன்றாக வந்திருக்கிறது. இது ஒரு வித்தியாசமான காதல் கதை.

இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, June 15, 2013

இயக்குனர் மணிவண்ணன் காலமானார்..

பிரபல இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 59. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில், 50 படங்களுக்கு டைரக்டராகவும், சுமார் 400 படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ள மணிவண்ணன், சென்னை நெசப்பாக்கத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட அவரது இல்லத்திலேயே உயிர் பிரிந்தது. 

கோவை மாவட்டம் சூலூரில் 1954-ம் ஆண்டு ஜூலை மாதம் 31ம் தேதி பிறந்தவர் மணிவண்ணன். சினிமா மீதுள்ள ஆர்வத்தால் சினிமா துறைக்கு வந்தார். ஆரம்பத்தில் சின்ன வேடங்களில் நடித்தவர், பின்பு பாரதிராஜாவிடம் உதவியாளராக சேர்ந்தார். பாரதிராஜாவின் நிழல்கள், டிக் டிக் டிக், சிவப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் மூலம் இயக்குனராக அவதரித்தார். தொடர்ந்து இளமை காலங்கள், இங்கேயும் ஒரு கங்கை, நூறாவது நாள், பாலைவன ரோஜாக்கள், முதல் வசந்தம், ஜல்லிக்கட்டு, சின்ன தம்பி பெரிய தம்பி, வாழ்க்கை சக்கரம், மூன்றாவது கண், தெற்கு தெரு மச்சான், அமைதிப்படை உள்ளிட்ட 50 படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக சமீபத்தில் நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ., என்ற படத்தை இயக்கினார். 

இயக்குனராக மட்டுமல்லாமல் காமெடி, வில்லன், அப்பா கேரக்டர் உள்ளிட்ட பல்வேறு குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்துள்ளார். ரஜினி, கமல், விஜயகாந்த், அஜீத், விஜய், உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

சினிமா மட்டுமல்லாது அரசியல் மற்றும் சமூகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவர். ஆரம்பத்தில் மதிமுக கட்சியில் இருந்தவர் பின்பு டைரக்டர் சீமானின் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்தார். தொடர்ந்து இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு குரல் கொடுத்து வந்தார். 

இந்நிலையில், சென்னை நெசப்பாக்கத்தில் வசித்து வந்த மணிவண்ணனுக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பாகவே அவரது இல்லத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. மணிவண்ணனுக்கு ஜோதி என்ற மகளும், ரகு என்ற மகனும் உள்ளனர். 

மறைந்த மணிவண்ணனின் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மணிவண்ணனின் மறைவுக்கு திரைநட்சத்திங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Friday, May 31, 2013

லேட்டஸ்டா என்ன செல்போன் வந்திருக்கு? அறிய ஆவலா

செல்போன்கள் மற்றும் டாப்லெட்டுகளின் விலைகளை ஒரே இடத்தில் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுக்கு பிடித்த ஒன்றை தேர்வு செய்து ஆன்லைனில் வாங்க உதவுகிறது கோபுரோபோ. வாடிக்கையாளர் தான் ராஜா. சந்தையில் உள்ள பொருளை அவர் விலையைப் பற்றிய பயமில்லாமல் தேர்வு செய்யும்போது தான் அவருக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. அவ்வாறு விலையைப் பற்றிய கவலையில்லாமல் ராஜா போன்று வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்க உதவுகிறது கோபுரோபோ.
இங்கு நீங்கள் செல்போன் மற்றும் டாப்லெட்டுகளின் விலைகளை எளிதில் ஒப்பிட்டுப் பார்க்கலாம். கோபுரோபோ என்பது ஆன்லைனில் பொருட்களின் விலையை ஒப்பிட்டுப் பார்த்து வாங்க உதவும் சர்ச் என்ஜின். நீங்கள் கடை கடையாக ஏறி இறங்கி விலையைக் கேட்டு அதன் பிறகு உங்களுக்கு பிடித்த செல்போனையோ, டாப்லெட்டையோ வாங்கத் தேவையில்லை.
லேட்டஸ்டா என்ன செல்போன் வந்திருக்கு? அறிய ஆவலா.?

இருந்த இடத்தில் இருந்து கொண்டே கோபுரோபோ மூலம் சாம்சங், ஆப்பிள், நோக்கியா, பிளாக்பெர்ரி, மோட்டோரோலா, மைக்ரோமேக்ஸ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களின் செல்போன்கள் மற்றும் டாப்லெட்டுகளின் விலையை ஒப்பிட்டுப் பார்த்து ஆன்லைனிலேயே வாங்கலாம். சிம்பயான், ஆன்ட்ராய்ட், படா ஓஎஸ், 3ஜி மற்றும் ஐஓஎஸ் ஆபரேட்டிங் சிஸ்டமுள்ள செல்போன்களை தேர்வு செய்யலாம்.
செல்போன்கள், டாப்லெட்டுகள், டச் போன்கள், ஆன்ட்ராய்ட் போன்கள், வின்டோஸ் போன்கள் உள்ளிட்டவற்றின் விலையுடன் வாடிக்கையாளரின் விமர்சனம், வீடியோ விமர்சனம், ரேட்டிங் ஆகியவையும் வெளியிடப்பட்டிருக்கும். இது சிறந்த தயாரிப்பை நீங்கள் தேர்வு செய்து வாங்க பெரிதும் உதவும்.

பென்ரைவை பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள்

பென்ரைவ் என்பது இப்பொழுது கணணி உபயோகிப்பவர்கள் அனைவரும் உபயோகித்து கொண்டு இருக்கும் ஒரு பொருளாகும். இதன் மூலம் நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொண்டு மற்றவர்களுக்கோ அல்லது வேறொரு கணணியில் பதியவோ உபயோகப் படுத்தப்படுகிறது. இந்த பென்ரைவ்களில் என்ன பிரச்சினை என்றால், இதில் எளிதில் வைரஸ் பரவும் பாதிப்பு உள்ளது. ஆகையால் நம் கணணிக்கும் வைரஸ் பரவி விடுகிறது. நம் பென்ரைவ் பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள் கீழே தரப்பட்டுள்ளன.

1. USB WRITE PROTECTOR
இந்த மென்பொருள் உங்களுடைய பென்ரைவ்களில் உள்ள கோப்புகளை மற்றவர்கள் படிக்க மட்டுமே அனுமதிக்கும். இந்த கோப்புகளை அவர்கள் திருத்துவதற்கு இந்த மென்பொருள் அனுமதிக்காது.

இதனால் உங்கள் பென்ரைவ் நீங்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் பயப்படாமல் கொடுத்து அனுப்பலாம். மற்றும் வைரசினால் இந்த பென்ரைவ்களை கண்டறிய முடியவில்லை.


http://www.gaijin.at/dlusbwp.php இந்த லிங்கினூடாக மென்பொருளை டவுன்லோட் செய்யுங்கள்

2. USB FIREWALL
பென்ரைவ் உபயோகிக்கும் பெரும்பாலானோர் உபயோகிக்கும் மென்பொருள். இது USB யில் இருந்து கணணிக்கு வைரஸ் பரவாமல் இருக்க பயன்படுகிறது. இதை DOWNLOAD செய்து இயக்கியவுடன் இந்த மென்பொருள் உங்கள் கணணியின் பின்பக்கத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்.

ஏதேனும் வைரஸ் உங்கள் கணணியில் ஊடுருவ முயற்சிக்கும் போது இந்த மென்பொருள் நமக்கு எச்சரிக்கை கொடுக்கிறது.

http://www.net-studio.org/eng/usb-firewall.html இந்த லிங்கினூடாக மென்பொருளை டவுன்லோட் செய்யுங்கள்

3. PANDA USB VACCINATION TOOL
பாண்டா நிறுவனம் வழங்கும் இலவச மென்பொருளாகும். இந்த மென்பொருளை நம் கணணியில் நிறுவினால் பென்ரைவில் உள்ள autorun.inf கோப்பை முற்றிலுமாக தடைசெய்கிறது.

உங்கள் பென்ரைவில் தானே இயங்கும் வசதி தடுக்கப்படுவதால் வைரஸ் பரவும் வாய்ப்பு முற்றிலுமாக குறைகிறது. இந்த மென்பொருளுக்கு நமக்கு தேவையான சோட்கட் தேர்வு செய்யும் வசதியும் உள்ளது.

http://download.cnet.com/Panda-USB-Vaccine/3000-2239_4-10909938.html இந்த லிங்கினூடாக மென்பொருளை டவுன்லோட் செய்யுங்கள்

4. USB GUARDIAN
இந்த மென்பொருள் உபயோகிக்க மிகவும் சுலபமானது. இதன் மூலம் பாதுகாப்பாக நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொள்ள முடியும். வைரஸ் பாதிக்கும் என்ற கவலையே வேண்டாம். இதன் மூலம் நமக்கு தேவையான கோப்பை நாம் lock செய்தும் வைத்து கொள்ளலாம்.

http://www.usb-guardian.com/ இந்த லிங்கினூடாக மென்பொருளை டவுன்லோட் செய்யுங்கள்

பேஸ்புக்கை தாக்கும் புதிய வைரஸ் : எச்சரிக்கும் மைக்ரோசொப்ட்

பேஸ்புக்கை தாக்கும் புதிய வகை ட்ரொஜன் ஹோர்ஸ் வைரஸ் ஒன்று பரவ ஆரம்பித்துள்ளதால் கவனமாக பேஸ்புக்கை பயன்படுத்துமாறு மைக்ரோசொப்ட் எச்சரித்துள்ளது. 'Trojan:JS/Febipos' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் தன்னியக்கமாக Like, Comment மற்றும் Share செய்து குழப்பங்களை ஏற்படுத்துகின்றது. தற்போது பிரேஸில் மொழியில் பிரேசில் நாட்டில் அதிகளவில் வியாபித்துள்ள இந்த வைரஸ் ஐரோப்பா நாடுகளுக்கும் விரைவில் ஆங்கில மொழியிலும் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 Firefox, Chrom போன்ற இணைய உலாவிகளின் Plug-ins என்ற போர்வையிலேயே இந்த வைரஸ் பரவுவதாகவும் குறித்த வைரஸ் தாக்கிய கணனியின் மூலம் அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளுவதாகவும் தெரிவித்துள்ள மைக்ரோசொப்ட் நிறுவனம் அதிலிருந்து ஓரளவு தப்பிக்கவும் சில வழிகளைக் கூறியுள்ளது.

அதாவது தரவேற்றம் செய்யக் கூறி புதிதாக Firefox, Chrom ஊடாக வரும் Plug-insகளை தவிர்த்தல் மேலும் பேஸ்புக்கினைப் பயன்படுத்திவிட்டு முறைப்படி அதிலிருந்து வெளியேறுவதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் மைக்ரோசொப்ட் எச்சரித்துள்ளது. இதேவேளை இந்த வைரஸ் விரைவில் பிரேஸில் தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கும் பல மொழிகளில் பரவலடையும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக கூறப்படுகின்றது.

உங்கள் செல்போனில் இருந்து கணணியை இயங்க வைப்பது எப்படி

அநேகமாக இணையப் பயனாளர்கள் அனைவருக்கும் Team Viewer பற்றி தெரிந்து இருக்கும்.பெரும்பாலனோர் கணினியில் இதை பயன்படுத்தியும் இருப்பீர்கள். இதை இலவசமாக உங்கள் Android போனுக்கும் பயன்படுத்த இயலும். இந்த இந்த Application மூலம் உங்கள் கணினியில் Team Viewer இருந்தால் அதன் மூலம் உங்கள் கணினியை உங்கள் Android ஃபோனை பயன்படுத்தி Control செய்யலாம்.

இதன் மூலம் உங்கள் கணினியில் ஆன்டிராய்ட் போன் பயன்படுத்தி, உங்களுக்கு தேவையான வேலைகளை செய்து கொள்ள முடியும். கணினியில் வரும் File Transfer வசதி மட்டும் அலைபேசியில் இல்லை.

Online ல் இருக்கும் Team Viewer நண்பர்களை காண இயலும். விண்டோஸ், லினக்ஸ், மேக் என்று அனைத்து இயங்கு தளங்களிலும் இயங்க முடியும்.

Keyboard பயன்படுத்தும் வசதியை மிக எளிதாக வழங்கி உள்ளது. இதன் மூலம் கணினியில் உள்ள Keyboard தரும் வசதிகளை நீங்கள் இதிலேயே செய்யலாம்.

Remote Control,computer,Android device

left click, right click, drag & drop, scroll wheel, zoom போன்ற அனைத்தும் உள்ளது. இதனால் உங்கள் வேலை மிகவும் எளிதாகிறது, அதே சமயத்தில் எந்த இடத்தில் இருந்தும் உங்கள் கணினியை இயக்க முடிகிறது.

Team Viewer பற்றி அறிந்தவர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய ஒன்று இது. முக்கியமாக உங்கள் கணினியில் Team Viewer இருக்க வேண்டும்.

இதை தரவிறக்கம் செய்ய...
https://play.google.com/store/apps/details?id=com.teamviewer.teamviewer.market.mobile

Video Guide:

முழு திரைப்படத்தையும் 1-விநாடியில் தரவிறக்கம்

ஒரு விநாடியிலேயே முழு திரைப்படத்தையும் டவுன்லோடு செய்யும் அளவுக்கு அதிவேகம் கொண்ட, ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றை சோதனையை சாம்சங் நிறுவனம் வெற்றிகரமாக செய்துள்ளது.
தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங், இதுகுறித்து கூறியிருப்பதாவது:
தற்போதுள்ள அலைக்கற்றைகளில் 4ஜிதான் வேகமானதாக கருதப்படுகிறது. ஆனால், இதை விட பல நூறு மடங்கு வேகம் கொண்ட 5ஜி தொழில்நுட்பம்  வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளது. இதன்படி, 2 கி.மீ. தூர இடைவெளிக்குள் அமைந்த கம்ப்யூட்டர்களுக்குள் ஒரு ஜிகாபைட் பைல் ஒரு விநாடியில் பரிமாறப்பட்டது.
வரும் 2020ம் ஆண்டுக்கு முன்னதாக இந்த தொழில்நுட்பம் வர்த்தக ரீதியில் பொதுமக்களுக்கு கிடைத்துவிடும். இதன் மூலம் 3டி படங்கள், நேரடி அறுவை  சிகிச்சை காட்சிகள், அல்ட்ரா ஹை டெபனேசன் பைல்கள் உள்ளிட்டவற்றை, அளவின்றி வெகு விரைவாக பெற முடியும்.
நேரடி காட்சிகளை, உடனுக்குடன்  காண்பதும் சாத்தியமாகும். இதற்காக 64 டைட்டன் தொழில்நுட்பத்தில் அமைந்த 64 கோபுரங்கள் அமைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.
இவ்வாறு சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகிலேயே பூமிக்கு அடியில் வயர்களை பதித்து அதிகளவில் இன்டர்நெட் இணைப்பு கொடுத்துள்ள நாடுகளில் தென் கொரியா முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

தமிழ் பேசும் மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் பழங்குடியினர்

cameroon_tribes_tamil
எங்கும் வாழும் என்றும் வாழும் தமிழ்.

விஸ்வரூபம் 2 அக்டோபரில் ரிலீஸ்

கமல் ஹாஸன் இயக்கி நடித்து வரும் விஸ்வரூபம் 2 படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
Kamal S Viswarooam 2 Release October
படத்தின் இரண்டாம் பாகம் இந்தியாவில் என்று அறிவிப்போடு 'விஸ்வரூபம்' படத்தை முடித்திருந்தார் கமல். ஏற்கெனவே கணிசமான காட்சிகளை படமாக்கியும் வைத்திருந்தார். மீதிக் காட்சிகளை தாய்லாந்தில் படமாக்கி வருகிறார்.
மேலும் சில நாடுகளிலும் ஷூட்டிங் நடத்தத் திட்டமிட்டுள்ளார் கமல்.
ஆண்ட்ரியா, பூஜாகுமார், ராகுல் போஸ், சேகர் கபூர் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த இரண்டாம் பாகத்தை இந்த ஆண்டே வெளியிடத் திட்டமிட்டுள்ளார் கமல்.
தாய்லாந்து படப்பிடிப்பில் கமலுடன் ஆண்ட்ரியா நடிக்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இறுதிக்கட்ட படப்பிடிப்பை டெல்லியில் நடத்த திட்டமிட்டுள்ளனர். 'விஸ்வரூபம் 2' படத்தினை கமல் தயாரிக்கவில்லை, ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.
இப்படத்தினை அக்டோபரில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். பெரிய படங்கள் எதுவும் வரவில்லை என்றால் தீபாவளிக்கு வெளியாகக் கூடும்.

18ம் நூற்றாண்டில் சுட்ட, ரஜினியின் லேட்டஸ்ட் ‘பஞ்ச்’ டயலாக்

பஞ்ச்' டயலாக் இல்லாத ரஜினியின் சமீபத்திய படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்தளவுக்கு ‘பஞ்ச்' மன்னன், நம்ம படையப்பா.
18ம் நூற்றாண்டு நாவலுக்கும், நம்ம சூப்பர் ஸ்டார் டயலாக்குக்கும் ஒரு தொடர்பு இருக்குமென உங்களில் யாராவது, எப்போதாவது நினைத்ததுண்டா?
சம்பந்தம் இருக்கிறது. ரஜினியின் பிரபல டயலாக் ஒன்று 18ம் நூற்றாண்டு நாவலாசிரியரான ஜானே அகஸ்டனின் நாவலில் ஒரு கதாபாத்திரம் பேசும் வசனம் என தற்போது தெரிய வந்துள்ளது.

.


ஜானே அகஸ்டன், தற்போதைய நவீன பாஷையின் ராணி எனப்படுபவர், இவரின் நாவலில் தான் நமது சூப்பர் ஸ்டார் சுட்ட டயலாக் இருக்கிறது.

ஜானேயின் ‘எம்மா' நாவலில் ஒரு கதாபாத்திரம் பேசும் டயலாக் தான், சுரேஷ் கிருஷ்ணாவின் ‘பாட்ஷா'வில் வரும் பிரபல டயலாக் ஆகும்.

சரி, சுத்தி வளைக்காமா அந்த டயலாக் என்னணு சொல்லிடுறோம். ‘நா ஒரு தடவை சொன்னா... நூறு தடவை சொன்ன மாதிரி'னு தலைவர் விரலை சுத்தி... சுத்தி சொல்லுவாரே, அதுதாங்க அந்த சுட்ட டயலாக்.
இதுலயிருந்து என்ன தெரியுதுனா... நம்ம சுரேஷ்கிருஷ்ணாவும் ஜானேயோட நாவல படிச்சிருக்காரு.


ரெண்டு நூற்றாண்டு காலமா பிரபலமாகாத ஒரு வசனம், தலைவரு சொன்னதுமே 'பஞ்ச் டயலாக்'-கா நிக்குதுன்னா, அது தான் சூப்பர் ஸ்டாரோட .

கிளாமரை விரும்பும் தாவணி லஷ்மி மேனன்

இப்படி ஆசைப்படுபவர் வேறு யாருமல்ல சுந்தர பாண்டியன் நாயகி நம்ம லஷ்மி மேனன்தான். நடித்த எல்லாப் படங்களிலும் தாவணியிலும், புடவையிலும் நடித்து... போரடித்து விட்டது. அதனால் எ‌ன்னைஅதுபோன்ற படங்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்கிறார்கள். 


அதனால் நானும் மற்ற நடிகைகள் போல், விதவிதமான காஸ்ட்யூம் போட்டு என் அழகை காட்டப் போகிறேன். எல்லா உடைகளும் லஷ்மி மேனனுக்குப் பொருந்துகிறது என்று சொல்ல வேண்டும். அதற்காக ஒரு ஸ்டில் சூட் வைத்து பல விதமான போஸ்களில் போட்டோ எடுத்து வைத்திருக்கிறேன். 

அதை ஒவ்வொரு பெரிய பெரிய சினிமா நிறுவனங்களுக்கும் அனுப்ப போகிறேன். அப்போதாவது என் அழகை தெரிந்து கொண்டு எல்லாப் படங்களுக்கும் அழைக்கட்டும். என்கிறார் கிளாமருக்கு ஆசைப்படும் மேனன்.

15 வருடங்களாக தேளை உயிரோடு தின்னும் வினோதம்




ஈராக்கில் விவசாயி ஒருவர் தினமும் ஒரு தேளை உயிரோடு சாப்பிடுவதை வழக்காமாக கொண்டுள்ளார். கடந்த 15 வருடங்களாக இதை செய்து வரும் இவரால் ஒருநாள் கூட தேள் சாப்பிடாமல் இருக்கமுடியாது.

ஈராக்கை சேர்ந்தவர் இஸ்மாயில் ஜசிம் முகமது (34). இவர் ஒரு விவசாயி. இவர் விவசாயத்தில் ஈடுபடும் போது, பல பூச்சிகள் மற்றும் தேள்களால் கடிப்பட்டுள்ளார். இதை தடுக்க முயன்ற அவர், உயிருடன் தேள்களை பிடித்து சாப்பிடத்துவங்கினார்


சுமார் 15 வருடங்களாக இதை செய்து வரும் அவரால் ஒருநாள் கூட தேள் சாப்பிடாமல் இருக்கமுடியாது.

தேள்களை உயிருடன் சாப்பிடும்போது பலமுறை வாயில் கடி வாங்கியதால், இவருக்கு விஷத்தால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மைலேஜ் - செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்!


டிசைன், பெர்ஃபாமென்ஸ், மைலேஜ், விலை என எல்லாம் பார்த்துப் பார்த்துதான் கார் அல்லது பைக்கை வாங்குகிறோம். ஆனால், எப்படிப் பயன்படுத்தினால் நமக்கு லாபம் என்ற விஷயத்தைக் கவனிக்கவும் கடைப்பிடிக்கவும் தவறிவிடுகிறோம். எந்த வாகனமாக இருந்தாலும், நாம் பயன்படுத்துவதில்தான் சூட்சுமமே இருக்கிறது. இதில், மைலேஜ் என்பது மிக முக்கியம். ஏனென்றால், நம் பர்ஸில் இருக்கும் காசை கரைத்துக் கொண்டே இருப்பதில், இதற்குத்தான் முதல் இடம். சரி, எப்படியெல்லாம் எரிபொருள் செலவைக் கட்டுப்படுத்த முடியும்? 
அணுகுமுறை முக்கியம்!
நீங்கள் கார் அல்லது பைக் ஒன்றை வாங்கிவிட்டீர்கள் என்றால், உங்களுக்குத் திருமணம் நடந்தது மாதிரிதான். வாகனத்துக்கும் உங்களுக்கும் ஒரு பரஸ்பர ஒப்பந்தம் ஏற்பட்டுவிடும். எல்லோரும் அட்வைஸ் செய்வார்கள். 'முதல் 2,000 கி.மீ வரை காரை அளவாக ஆக்ஸிலரேஷன் செய்யுங்கள். அப்போதான் இன்ஜின் செட் ஆகும்’ என்பார்கள். ஏன் இவ்வாறு சொல்கிறார்கள்?
ஏனென்றால், முதல் 2,000 கி.மீ-க்கு நீங்கள் எவ்வாறு இன்ஜினைக் கையாள்கிறீர்களோ, அதைப் பொறுத்துதான் பின்னாளில் உங்கள் வாகனத்தின் பெர்ஃபாமென்ஸும் மைலேஜும் அமையும். இதைத்தான் வாகனத் துக்கும் உங்களுக்குமான உறவு என்பார்கள். ஏனென்றால், எல்லா டிரைவர்களும் ஒரே விதத்தில் வாகனத்தை அணுகமாட்டார்கள். எனவே, ஒவ்வொரு ஓட்டுனரின் அணுகுமுறைக்கு ஏற்ப வாகனம் பின்னாளில் அவர்களுக்கான செலவுகளை தீர்மானிக்கும்.
புத்தம் புதிய வாகனத்தில் இருக்கும் இன்ஜினில் பிஸ்டன், சிலிண்டர், பிஸ்டன் ரிங்ஸுகள், பேரிங்குகள் என அசையும் பாகங்கள் அனைத்துமே புதியவை; உராய்ந்து கொண்டே இருப்பவை. இங்கே எது முக்கியம் என்றால், அவை உராயும் விதம். இந்த உராய்தல் சமமாகவும், மிருதுவாகவும் இருக்க வேண்டும். புதிய வாகனத்தைக் கண்டபடி ஆக்ஸிலரேஷன் செய்தால், செட் ஆகியிருக்காத பிஸ்டன் ரிங்ஸுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டு விடும். இதனால், எரிபொருள் கலவை எரியும் இடமான கம்பஷன் சேம்பரில் சரியான அழுத்தம் கிடைக்காது. அதனால் எரிபொருள், விரயமாகும்.
எனவே, புதிய வாகனத்தில் வீணாக ஆக்ஸிலரேஷன் செய்து விளையாடாமல், நிதானமாகவே ஓட்டுங்கள். கொஞ்ச நாள் பொறுமையுடன் ஓட்டி, வாகனத்தை உங்களுக்குப் பழக்கப்படுத்துங்கள். நீங்கள் ஓட்டுகையில் மைலேஜ் கூடுதலாகவோ, குறைவாகவோ தருகிறதா என்று சோதியுங்கள். அதைப் பொறுத்து, நீங்கள் ஓட்டும் விதத்தை மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள்!
ஓட்டும் விதத்தைப் பொறுத்தே பர்ஸ் காலியாகும்!
சிலர், ஜாலியாக ஓட்டுகிறேன் எனத் தேவையில்லாமல் டவுன் ஷிஃப்ட் செய்து ஓட்டுவார்கள். அவசியம் இல்லாமல் குறைந்த கியரில் ஓட்டினால், இன்ஜின் அதிகமாக எரிபொருளைக் குடிக்கும். சரியான வேகத்தில் சரியான கியர் என்பதுதான் எப்போதும் சரி.
எந்த மனநிலையிலும் வாகனத்தை நிதானமாக இயக்குங்கள். திடீர் திடீரென்று வேகமெடுத்து ஓட்டக் கூடாது. சிலர், பிக்-அப் கிடைக்கும் என நினைத்துக்கொண்டு சும்மாவே கிளட்சை அழுத்துவார்கள். இதனால், தேவையில்லாமல் இன்ஜின் அதிகமாக ஆக்ஸிலரேஷன் ஆவதுடன், பழைய ஆர்பிஎம்முக்கே திரும்பிவிடும். பிக்-அப் ஒருபோதும் அதிகரிக்காது.
காரில், மணிக்கு 80 கி.மீ வேகத்துக்கு மேல் நெடுஞ்சாலையில் ஓட்டப் போகிறீர்கள் என்றால், ஜன்னல்களை ஏற்றிவிட்டு ஏ.சியுடன் பயணிப்பதுதான் சரி. ஏ.சி மைலேஜைக் குறைக்கும் என நினைத்து, நெடுஞ்சாலையில் ஜன்னகளைத் திறந்துவிட்டு ஓட்டினீர்கள் என்றால், காற்றால் ஏரோடைனமிக்ஸ் பாதிக்கப்பட்டு, காரை அலைக்கழிக்கும். இதனால், மைலேஜ் பாதிக்கப்படும்
சீரான வேகம்! இதுவும் நல்ல மைலேஜுக்கு வழி வகுக்கும். மணிக்கு 100 கி.மீ வேகத்துக்குக் கீழே சீராக ஓட்டுவது நல்லது. அதேபோல், பைக் என்றால், 40 - 60 கி.மீ வேகத்தில் ஓட்டினால் சிறந்த மைலேஜ் கிடைக்கும்.
சிக்னலை நெருங்குகிறீர்களா? திரும்பப் போகிறீர்களா? வேகத்தடை முன்னே இருக்கிறதா? - ஆக்ஸிலரேட்டரில் இருந்து காலை எடுத்துவிடுங்கள். அருகே சென்று பிரேக் செய்வதால், இரண்டு மடங்கு கூடுதலாக எரிபொருள் வீணாகும்!
மைலேஜ் நிறையக் கிடைக்கும் என சரிவான சாலையிலோ, காலியான ரோட்டிலோ காரை நியூட்ரலில் ஓட்டாதீர்கள். திடீரென பிரேக் செய்ய வேண்டிய சமயத்தில், 'இன்ஜின் பிரேக்கிங்’ இல்லாமல் விபத்துக்கு வழி வகுத்துவிடும்.
நாலு தெரு தள்ளி இருக்கும் கடைக்கோ, கோவிலுக்கோ வாகனம் பயன்படுத்துவதைத் தவிர்த்து ஒரு குட்டி நடை போட்டு வாருங்கள். வாகனத்துக்கும் நல்லது; உடலுக்கும் நல்லது.
இன்னும் இருக்கு!
டயர்களில் இருக்கும் காற்றின் அளவும் மைலேஜைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எப்போதும் டயர்களில் வாகன நிறுவனம் பரிந்துரைத்த அளவில் காற்றை நிரப்பி வைத்திருங்கள். குறைவான காற்றழுத்தம் டயரின் சுழலும் திறனைக் குறைத்துவிடும். இதனால், மைலேஜ் மிகக் குறைவாகவே கிடைக்கும். அதிகமான காற்றழுத்தத்தில் இருக்கும் டயர்கள் சமமாக தரையில் பதியாது. எனவே, காற்றழுத்தம் எப்போதும் சரியான அளவிலேயே இருக்க வேண்டும்!
இன்னொரு முக்கியமான விஷயம், காரில் இருக்கும் தேவையில்லாத கூடுதல் எடை. எப்போதும் தேவைப்படும் அத்தியாவசியமான லக்கேஜை மட்டும் எடுத்துச் செல்லுங்கள்.
எப்படி நம் உடலுக்கும் அவ்வப்போது முழு செக்-அப் தேவைப்படுகிறதோ, அது போலத்தான் காருக்கும். கார் நிறுவனம் சொன்ன கி.மீ கணக்கில் வாகனத்தைக் கண்டிப்பாக சர்வீஸ் செய்ய வேண்டும்.
இதையெல்லாம் தாண்டி ஒரு முக்கியமான விஷயம், எரிபொருள் நிரப்பும் பங்க். நம் ஊரில் உள்ள பங்க்குகளில் என்னென்ன தகிடுதத்தங்கள் நடக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும். முடிந்த வரை ஒரு நல்ல பங்க்கை தேர்ந்தெடுத்து, அதிலேயே தொடர்ந்து எரிபொருள் நிரப்புங்கள். எந்த பங்க்கில் நாள் முழுக்க கூட்டம் குழுமுகிறதோ, அது நிச்சயம் நல்ல பங்க்காகத்தான் இருக்கும்.
நகரத்தில் கார் வைத்திருப்பவர்கள் டிராஃபிக்கைத் தவிர்க்க முடியாது. நகரத்தில் பயன்படுத்தும் கார்களில், ஓடும் நேரத்தில் செலவாகும் எரிபொருளைவிட சிக்னலிலும், டிராஃபிக் நெருக்கடியிலும்தான் அதிகம் எரிபொருளைக் குடிக்கும். காரணம், குறைந்த கியர்களில்தான் இந்த சமயங்களில் இன்ஜின் இயங்க வேண்டி இருக்கும். அதனால், இன்ஜின் ஆர்பிஎம்கள் இந்த சமயங்களில் அதிக அளவில்தான் இருக் கும். அப்படியானால் மைலேஜும் குறையும்தானே? இதைத் தடுக்க, முடிந்தவரை பீக் ஹவரில் காரை எடுத்துக்கொண்டு செல்லாமல், அரைமணி நேரம் முன்னதாகக் கிளம்புங்கள். சிக்னல்கள் அதிகம் இருக்கும் சாலையைத் தேர்ந்தெடுக்காமல், சுற்றி வந்தாலும் நிதானமாக ஒரே வேகத்தில் செல்லக் கூடிய சாலையாகப் பார்த்து ஓட்டுங்கள்!
இறுதியாக, இனிவரும் காலங்களில் எந்த எரிபொருள் விலையும் குறைய வாய்ப்பு இல்லை. எனவே, எரிபொருளைச் சேமித்தீர்கள் என்றால், உங்கள் காசை சேமிக்கிறீர்கள் என்றே பொருள். இந்தச் சேமிப்பை குடும்பத்துக்காக வேறு எதிலாவது சின்ன அளவில் முதலீடு செய்யலாம்

Friday, April 19, 2013

விக்ரமின் டாப் 10 படங்கள் - ஒரு பார்வை

ஆரம்ப காலத்தில் தொடர்ந்து தோல்விகளைத் தந்தவர் நடிகர் விக்ரம். ஆனால் அந்தத் தோல்விகளையே படிக்கற்களாக்கி தொடர் வெற்றிகளைக் கொடுத்தவரும் அவர்தான். கிட்டத்தட்ட அனைத்து இயக்குநர்களிடமும் நடித்துள்ளார். ஆனால் விக்ரமிடம் உள்ள ஒரு பாலிசி புது இயக்குநர்களை மிரள வைக்கிறது. குறைந்தது மூன்று படமாவது இயக்கியவர்களுக்கே தனது கால்ஷீட் என்கிறார். விக்ரம் இதுவரை நடித்த படங்களில் முதன்மையான பத்துப் படங்கள் பற்றிய ஒரு பார்வை இது...


சேது பாலா இயக்கிய முதல் படம். ஒரு நல்ல நடிகராக விக்ரமை அடையாளப்படுத்திய விதத்தில் இதுவே அவருக்கு முதல் படம் எனலாம். பாக்ஸ் ஆபீசிலும் பாராட்டப்பட்ட இந்தப் படம், கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்ட போது பெரும் வரவேற்பைப் பெற்றது.


தில் தரணி இயக்கத்தில் வெளியான இந்தப் படம்தான் விக்ரமை சிறந்த ஆக்ஷன் ஹீரோவாக வெளிக்காட்டியது. அளவான நடிப்பு, அழுத்தமான சண்டை, அதிரடியான திருப்பங்கள் என விக்ரமுக்கு புதிய பரிமாணம் கொடுத்த படம் இது.

காசி பார்வையற்ற இளைஞர் வேடத்தில் எத்தனையோ பேர் நடித்திருந்தாலும், அதற்கெல்லாம் உச்சமாக அமைந்தது விக்ரம் நடித்து, வினயன் இயக்கியிருந்த காசி. விக்ரம் என்ற நடிகனைத் தாண்டி நிஜமான பார்வையற்ற இளைஞன் காசிதான் ரசிகர்கள் கண்ணுக்குத் தெரிந்தனர்
.

தூள் விக்ரமின் எவர்கிரீன் படங்களில் இந்தப் படத்துக்கு முக்கிய இடம் உண்டு. எந்த கேள்வியும் கேட்கவிடாமல் பரபரவென ஓடிய இதன் திரைக் கதைக்கு உயிர் கொடுத்தவர் விக்ரம். நல்ல வசூலுடன் வெள்ளி விழா கண்ட படம் இது.

சாமி போலீஸ் கதையை மையமாக வைத்து வந்த படங்களில் சாமிக்கு தனி இடம் உண்டு. 'போலீஸ்னா இப்படித்தான்டா இருக்கணும்!' என்று சொல்ல வைத்த படம். வெளியாகி 10 ஆண்டுகள் கழித்து இப்போது இந்தியில் போலீஸ் கிரி என்ற பெயரில் தயாராகி வருகிறது.

ஜெமினி விக்ரமின் ஆக்ஷன் ஹீரோ இமேஜை இன்னும் ஒரு படி மேலே உயர்த்திய படம் இந்த ஜெமினி. சரண் இயக்கியிருந்தார். ஏவி எம் நிறுவனம் தொடர்ந்து படங்கள் தயாரிக்க உத்வேகமாக அமைந்தது இந்த ஜெமினி. இந்தப் படம் வெளியான பிறகு ரொம்ப நாளைக்கு விக்ரமும் ரசிகர்களும் ஓ போடு என்று சொல்லிக்கொண்டே இருந்தனர்.

பிதா மகன் பாலாவின் இயக்கத்தில் விக்ரம் நடித்த இரண்டாவது படம் பிதாமகன். விக்ரமுக்கு தேசிய விருதினைப் பெற்றுத் தந்தது இந்தப் படம். உடன் நடித்த சூர்யாவுக்கு இந்தப் படம் நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுத்தது.

அந்நியன் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த முதல் படம் இது. அன்றைய நாளில் மிகப் பெரிய பட்ஜெட். ஐடிபிஐ வங்கியின் நிதியுதவியோடு இந்தப் படத்தை எடுத்திருந்தனர். தமிழில் ஆரம்பத்தில் சராசரியாகப் போன இந்தப் படம், தெலுங்கில் சூப்பர் ஹிட்டானது.

ராவணன் மணிரத்னம் இயக்கிய இந்தப் படம் விக்ரமின் பெரிய தோல்விப் படங்களில் ஒன்றாக இருந்தாலும், நடிப்பில் அசத்தியிருந்தார்.

தெய்வத் திருமகள் இயக்குநர் விஜய்யும் விக்ரமும் கைகோர்த்த முதல் படம் இது. ஆட்டிசம் பாதித்தவராக விக்ரம் நடித்திருந்தார். ஐ யாம் சாம் படத்தின் தழுவல் என்று விமர்சிக்கப்பட்டாலும், விக்ரம் மற்றும் பேபி சாராவுக்காக குடும்பத்தோடு போய் பார்த்து கண்ணீர் விட்டு திரும்பினார்கள் தமிழ் ரசிகர்கள்.

ஐ கடந்த ஆண்டு விக்ரம் நடித்த இரண்டு படங்கள் ராஜபாட்டை, தாண்டவம் மற்றும் இந்த ஆண்டு ஆரம்பத்தில் வந்த டேவிட் இரண்டுமே தோல்வியைத் தழுவின. இதையெல்லாம் ஈடுகட்டும் வகையில் இப்போது ஷங்கர் இயக்கும் ஐ படத்துக்காக உழைத்து வருகிறார் விக்ரம்!

உலகின் 100 பிரபலங்கள்... ப.சிதம்பரம், அமீர்கான், மலாலா, மிஷேல் ஒபாமா, போப்

டைம் இதழ் தேர்வு செய்துள்ள 2013ம் ஆண்டின் நூறு பிரபலங்கள் பட்டியலில் இந்தியாவின் நிதியமைச்சர் ப.சிதம்பரம், பாலிவுட் நடிகர் அமீர்கான் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா, பாகிஸ்தான் சிறுமி மலாலா ஆகியோரின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

ஒபாமா 8 வது இடம் டைம் வெளியிட்டுள்ள பட்டியலில் அதிபர் ஒபாமாவிற்கு 8 வது கொ உடன் அவரது மனைவி மிஷெல் ஒபாமாவும் இந்த முறை இடம் பெற்றுள்ளார்.

பாகிஸ்தானின் மலாலா பெண்களின் கல்விக்காக போரடி தாலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு உயிர் பிழைத்த மலாலாவின் பெயரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

ஜெனிபர் லாரன்ஸ் அமெரிக்காவின் புகழ்பெற்ற ராப் பாடகர் ஜெய் ஜீ Jay-Z, ஆஸ்கார் விருது வென்ற ஜெனிபர் லாரன்ஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உரிமையாளர் இலான் முஸ்க் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

ஒபாமாவின் மனைவி அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு எட்டாவது இடம் இடம் கொடுத்த டைம் பத்திரிகை அவருடைய மனைவி மிச்சேல் ஒபாமாவையும் இந்த லிஸ்ட்டில் இணைத்துள்ளது.

போப் ஆண்டவரும் லிஸ்டில் போப்பாண்டவர், பிரிட்டிஷ் இளவரசி கேத் மிடில்டன், ஆகியோரும் முக்கிய நபர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள பிரபலங்கள் ஆவர்.

ப.சிதம்பரத்தின் சாதனை பொதுவாக இந்திய அரசியல்வாதிகள் என்றால் ஊழல்வாதிகள் என்ற கண்ணோட்டம் மட்டுமே நிலவுகிறது. ஆனால் 67 வயதான ப.சிதம்பரம் தனது அலுவலகத்தில் நேர மேலாண்மையை திறம் பட அறிமுகப்படுத்தியுள்ளார் என்று டைம் இதழ் புகழ்ந்துள்ளது. இதற்காகவே 100 பேர் பட்டியலில் ப.சிதம்பரம் இடம் பெற்றுள்ளார்


.

அமீர்கானுக்கு சிறப்பு தொலைக்காட்சியில் அமீர்கான் தொகுத்து வழங்கிய சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சிதான் அவரது பல்வேறு புகழுக்கும் காரணமாக அமைந்துள்ளது. இதுவே நூறு பிரபலங்கள் பட்டியலில் இடம் பெற வைத்துள்ளது
.

அமீர்கான் பற்றி ஏ.ஆர். ரஹ்மான் அமீர்கான் குறித்து ஆஸ்கார் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்த கருத்தையும் டைம் இதழ் வெளியிட்டுள்ளது. நல்ல சமூக அக்கறையுள்ள படங்களை கொடுப்பதில் அமீர்கானுக்கு இணையாக இந்தியாவில் யாரும் இல்லை என்றும் அவருடை தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'சத்யமேவ ஜெயதே' மக்களிடம் மிகுந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

Thursday, April 18, 2013

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்


கணனியின் பயன் பரந்துபட்டுக் காணப்பட்ட போதிலும் அதனூடாக பல எதிர்விளைவுகளும் ஏற்படாமலில்லை. இவற்றில் ஒன்று தான் ஆபாச காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் போன்றன கணனியை வந்தடைதல் ஆகும்.
இவ்வகையான சம்பவங்கள் இணையப் பாவனையின் போது அதிகளவில் ஏற்படுகின்றன. எனவே இவ்வாறு கணனிப் பாவனையாளர்களை அறியாமல் அவர்களது கணனியில் சேமிக்கப்பட்டுள்ள வயதுக்கட்டுப்பாடுடைய (ஆபாசமான) வீடியோ கோப்புக்கள் மற்றும் புகைப்படங்களை ஸ்கான் மூலமாக கண்டறிந்து அவற்றினை இலகுவாக நீக்குவதற்கு Media Detective எனும் மென்பொருள் உதவுகின்றது.
எனினும் இம்மென்பொருளானது குறித்த கோப்பு வகைகள், அவற்றின் பெயர்கள், போன்றவற்றின் அடிப்படையிலேயே இச்செயன்முறையை மேற்கொள்ளுகின்றது.