என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Thursday, June 20, 2013

ராஜ்யசபா தேர்தல்.. கனிமொழியின் வெற்றியை தீர்மானிக்கப் போவது ஜெயலலிதாவே...எப்படி

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளரான கனிமொழியின் வெற்றியை தீர்மானிக்கக் கூடிய மிக துருப்புச் சீட்டு என்பது அதிமுக பொதுச்செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் கையில்தான் இருக்கிறது என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி.க்கள் இடத்துக்கான தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற இருக்கிறது. இதில் 5 வேட்பாளர்களின் வெற்றி உறுதியாகிவிட்டது.
ராஜ்யசபா தேர்தல்.. கனிமொழியின் வெற்றியை தீர்மானிக்கப் போவது ஜெயலலிதாவே...எப்படி?

 6வது எம்.பி. இடத்துக்கு திமுகவின் வேட்பாளராக கனிமொழியும் தேமுதிகவின் வேட்பாளராக இளங்கோவனும் களத்தில் இருக்கின்றனர். திமுக வேட்பாளர் கனிமொழியை 2 எம்.எல்.ஏக்கள் கொண்ட மனித நேய மக்கள் கட்சி ஆதரிக்கிறது. இதனால் திமுகவுக்கு தற்போதைய ஆதரவு எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது. கனிமொழியையே பாட்டாளி மக்கள் கட்சியும் ஆதரிக்கக் கூடும் எனத் தெரிகிறது. அப்படியான ஒருநிலையில் கனிமொழிக்கான ஆதரவு 28ஆக இருக்கும். தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை காங்கிரஸ் ஆதரிககக் கூடும் என்று கூறப்படுகிறது. தற்போதைய காங்கிரஸ் கட்சியானது ராகுல் காந்தியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் காங்கிரஸ் ஆதரிக்கலாம் என்று வாதிடப்படுகிறது.

 அப்படியே காங்கிரஸ் ஆதரிக்கும் போது 22+5= 27 என்ற ஒரு நிலை உருவாகலாம். இந்தச் சூழலில் கனிமொழி வெல்ல வேண்டுமா? தேமுதிகவின் இளங்கோவனை ஜெயிக்க வைத்து ‘அதிருப்தி' எம்.பி.யாக தம் வசம் வைத்துக் கொள்வதா? என்பதை தீர்மானிக்கும் இடத்தில் ஜெயலலிதாவே இருக்கிறார்...ஏனெனில் அவர் வசம் 7 தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உள்ளனர். கனிமொழி ஜெயிப்பதால் தமக்கு ஒரு பயனும் இல்லை. .ஆனால் தேமுதிகவின் வேட்பாளரை ஜெயிக்க வைத்து ஒரு அதிருப்தி எம்.பி.யை உருவாக்கி வைப்பதால் தமக்கு லாபம் என ஜெயலலிதா கருதினால் அந்த 7 தேமுதிக அதிருப்தி வேட்பாளர்களையும் தேமுதிக வேட்பாளருக்கே வாக்களிக்க சொன்னால் இளங்கோவன் வெற்றி பெற்றுவிடுவார் எனவும் கூறப்படுகிறது. ஆக கனிமொழி வெல்லப் போவது ஜெயலலிதாவின் கையில்



No comments:

Post a Comment