என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Tuesday, June 18, 2013

எனது இந்தி படத்திற்கு சொந்த குரலில் டப்பிங் பேசினேன்: தனுஷ்

தமிழில் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ள நடிகர் தனுஷ், முதன் முறையாக இந்தியில் ஆனந்த் என்பவரின் இயக்கத்தில் 'ராஞ்ஜனா' என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்தப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இது தமிழில் 'அம்பிகாபதி' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. தமிழ் பதிப்பின் உரிமையை அபிராமி ராமநாதன் வாங்கியுள்ளார். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
எனது இந்தி படத்திற்கு சொந்த குரலில் டப்பிங் பேசினேன்: தனுஷ்
இந்த விழாவில் தனுஷ் பேசியதாவது:-

ஆடுகளம் படத்தைப் பார்த்த இயக்குனர் ஆனந்த், என்னை இந்தியில் நடிக்க அழைப்பு விடுத்தார். மொழிப்பிரச்சினை காரணமாக முதலில் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்தேன். இருந்தாலும், தொடர்ந்து அவர் வற்புறுத்தியதால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

இந்திப்பட உலகில் எனக்கு மரியாதை இருக்குமா என்ற அச்சம் முதலில் இருந்தது. ஆனால் மிகவும் மரியாதையுடன் என்னை நடத்தினார்கள். இந்த படத்திற்கு நானே இந்தியில் டப்பிங் பேசியிருக்கிறேன். படம் நன்றாக வந்திருக்கிறது. இது ஒரு வித்தியாசமான காதல் கதை.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment