என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Thursday, December 15, 2011

விபசாரத்தில் ஈடுபடும் மாணவிகள் : ஆய்வில் அதிர்சி தகவல்!

இங்கிலாந்தில், அந்நாட்டு அரசு, மானியங்களை குறைத்து, கடுமையான சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கல்வி உதவித்தொகையை ரத்து செய்ததுடன், கல்வி கட்டணங்களை மூன்று மடங்காக உயர்த்தி விட்டது. இதனால், அந்நாட்டு மாணவிகள், தங்கள் படிப்புச் செலவை ஈடுகட்ட விபசாரத்தில் குதித்து இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்துள்ளது. பாலியல் தொழிலாளர்களுக்கான நல அமைப்பு இத்தகவலை தெரிவித்துள்ளது. மேலும், ஓட்டல்களில் ஆடை அவிழ்ப்பு நடனம் ஆடுபவர்களில் 25 சதவீதம் பேர் மாணவிகள் என்று லீட்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. விபசாரம் மட்டுமின்றி, சூதாட்டம் மற்றும் ஆபத்தான பணிகளில் மாணவ-மாணவிகள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தங்கள் பிள்ளைகளின் படிப்புச் செலவுக்காக தாய்மார்களும் விபசார குழியில் தள்ளப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

1 comment: