என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Saturday, December 1, 2012

2012ல் உலகம் அழியுமா? சூரிய சுனாமி பூமியை தாக்குமா? (வீடியோ விவரங்கள் இணைப்பு

2012-ஆம் ஆண்டில் அதுவும் டிசம்பர் மாதத்தில் உலகம் அழிந்துவிட அதிக வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லி பல்வேறு செய்திகள் உலகை சுற்றி வந்து கொண்டிருக்கின்றன.
மாயன் காலண்டர், எகிப்து பிரமிடின் அமைப்பு, பூமியின் சுழலில் ஏற்படப்போகும் மாற்றம், எதிர்பார்க்கப்படும் படுபயங்கர சூரியப் புயல் இப்படி பல காரணங்களை அட்டவணைபடுத்திக் கொண்டே போயிருக்கிறார்கள்.

இன்றைய நிலவரப்படி இது போன்ற டூம்ஸ்டே கதைகளுக்கு மக்களிடையே அதிக கிராக்கி உண்டு. இத்தகைய கதைகள் சீக்கிரமாக சூடுபிடித்து மக்களிடையே பிரபலமாகின்றன. TEOTWAWKI என புதிதாக ஒரு சொல்லையே உருவாக்கியிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இதன் விரிவாக்கம் The End Of The World As We Know It என்பதாம். இதனை சார்ந்து உருவாக்கப்படும் ஹாலிவுட் சினிமாக்கள் எப்போதுமே பிரபலமடைய தவறுவதில்லை. அந்த வகையில் The Happening என்ற திரைப்படம் பெரும் பிரபலம் பெற்ற ஒன்றாகும். இது ஓர் அறிவியல் நிறைந்த திரைப்படம். விபரிக்க முடியாத ஓர் இயற்கை அழிவில் இருந்து தப்பு முயற்சிக்கும் ஒரு குழுவைச் சார்ந்து எடுக்கப்பட்டது இத்திரைப்படம். நைட் ஷியாமளன் என்பர் இத்திரைப்படத்தினை இயங்கி இருந்தார்.
அவரின் எதிர்வுகூறல் இதுவாகவே இருந்தது. அதாவது நச்சு வாயு நிரம்பி நரம்பு மண்டலம் ஒன்று உலகை சுற்றிக் கொண்டு இருந்தது இதில் மாட்டிக் கொள்பவர்கள் தற்கொலை செய்யது கொள்ள தூண்டும் விசத் தண்மை கொண்டுள்ளது. அமெரிக்காவின் சிறிய பகுதியில் உருவாகிய நச்சு நரப்பு மண்டலம் வட அமெரிக்கா முழுவதும் பரவி பெரும் அழிவை ஏற்படுத்துகின்றது. இதில் அறிவியல் ஆசிரியரான கதாநாயகன், கதாநாயகி மற்றும் பிறர் எவ்வாறு தப்பி செல்கி்ன்றனர் என நகருகின்றது திரைப்படம்.
2008ம் ஆண்டில் அவர் தெரிவித்தமை தற்போது சாத்தியப்பட வாய்பு உள்ளதோ என்று எண்ண தோண்றுகின்து. அதாவது இன்று உலகில் பல பாகங்களில் ஏற்பட்டு வரும் அசாதாரண சூழ்நிலைகள் அவ்வாறு உள்ளது.
எடுத்துக்காட்ட உலகெங்கும் வன்முறைகளும், அழிவுகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. ஏன் எவ்வாறு இடம்பெறுகின்றது என அண்மைய ஆய்வும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
நாம் வாழும் இப் பூமியை சுற்றி காந்த சக்தி இயங்கிக் கொண்டு இருக்கின்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி சூரியனின்மேற்பரப்பில் புயல் ஒன்றின் காரணமாக இந்த காந்த விசை பாதிப்புக்கு உள்ளனது. சூரியனில் இருந்து வெளிப்பட்ட துகள்கள் பூமியின் காந்தி விசையினை தாக்கி அதன் மூலம் வலுவான காந்த புயல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த காந்த புயலின் தாக்குதலானது மனித மனங்களை தாங்கி எதிர்மறையான சிந்தனையை தூண்டும் என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் தற்கொலைகள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் அச்சப்படுகிறது.
தற்போது சூரியனின் மேற்பரப்பில் அதிகளவான காந்த புயல்கள் உருவாகி வருவதாக ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். 2012 இல் இதன் போக்கு அதி உச்சத்தை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கமாக உலகின் பல பாகங்களில் மின்சாரம் தடைப்படும், இலத்திரனியல் சாதனங்கள் செயலிழக்கும், வானில் பறக்கும் விமானங்கள் பாதிப்புக்குள்ளாகும் அந்த சூரிய புயல் அல்லது சூரிய சுனாமி பூமி முழுவதையும் அழிக்க கூடிய அபாயம் உள்ளது.
சூரிய புயல் என்றால் என்ன?

உருண்டையான சூரியன் ஹரையன் வாயு மற்றும் கீலியம் வாயுவினால் உருவாக்கப்பட்டுள்ளதாகும். பொதுவாக நாம் வாழும் பூமியின் மேற்பரப்பில்
காந்த சக்திகள் சுற்றிக் காணப்படுகின்றது. இது வேறு கிரங்களில் இருந்து வரும் தாக்கங்களை தடுத்து நிறுத்தும் பணியை மேற் கொள்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் சூரியனில் ஏற்படும் அனர்த்தம் காரணமாக ஏற்படும் பாதிப்புக்கள் பூமியை வந்து சேருகின்றது. அதாவது சூரியனில் ஏற்படும் புயலின் அலைகள் மிகப் பெரிதாக பூமியை வந்தடைகின்றது. இதன் போது பூமியை சுற்றி காந்த விசைகளில் உடைவுகள் ஏற்பட்டு பூமியை தாக்குகின்றது.
எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு கால கட்டத்தில் உலகம் அழித்து விட போகின்றது என்ற தோற்றப்பாடு வலுப் பெறுவதும் பின்னர் அடங்குவதும் வழமையே. ஆனால் 2012 மிக அண்மித்துக் கொண்டிருக்கும் இத் தருணத்தில் உலகம் அழித்து விடும் என்ற பீதியும் வலுப்பெற்றுள்ளதை மறுப்பதற்கும் இல்லை.


Dec 21, 2012 – End of the World? – Part 1 – 6






இவ் ஆபத்தில் இருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளுவது என்பது பற்றி இக் காணொளி ஆலோசனை சொல்லுகின்றது. கேட்டுப் பாருங்கள்…

No comments:

Post a Comment