என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Wednesday, March 28, 2012

மீண்டும் சொந்தப்படம் எடுக்கிறார் ஷங்கர்?!

Shankar to produce films again?
முதல்வன், காதல், இம்சை அரசன் 23ம் புலிக்கேசி, வெயில், கல்லூரி, அறை எண் 305ல் கடவுள், ஈரம், ரெட்டச்சுழி, அனந்தபுரத்து வீடு ஆகிய திரைப்படங்களை இதுவரை தயாரித்திருக்கிறார் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர். இவற்றில் ஒரு சில படங்கள் ஷங்கரின் பாக்கெட்டை பதம் பார்த்தன.
அதிலும் பிரபல இயக்குனர் ஒருவரை நடிக்க வைத்து இவர் தயாரித்த படத்தில் பெருத்த பிரச்சனையை சந்தித்தாராம் ஷங்கர். திடீரென்று அந்த " கரம் கூப்பி கும்பிடு போடும்" இயக்குநர் ஒரு கோடி சம்பளம் கேட்க, குழம்பிப் போனார் ஷங்கர் கொடுக்காமலிருந்தால் குரு துரோகமாகிவிடும் என்பதாலேயே பைசா குறையாமல் கொடுத்ததே பின் நாளில் சூடு கண்ட பூனையாக படக்கம்பெனியை அவர் மூட இந்த ஒரு விஷயம் போதுமானதாக இருந்தது.
அதன்பின் சொந்தப்படம் என்றாலே பின்னங்கால் முதுகில் பட ஓட்டம் எடுத்தார் ஷங்கர். ஆனால் அவரது இறுக்கத்தை விலக்கி மீண்டும் சொந்தப்படம் எடுப்பது குறித்து யோசிக்க வைத்திருக்கிறாராம் ஒரு புது இயக்குநர்.
இதுவரைக்கும் வேணாம்னு ஒதுங்கியிருந்தேன். உங்க கதை திரும்பவும் என்னை சொந்தப்படம் எடுக்க சொல்லுது. நம்பிக்கையோட இருங்க. நல்ல செய்தி வரும் என்று அனுப்பி வைத்திருக்கிறாராம் ஷங்கர். நெசந்தானா ஷங்கர் ஜி?!

No comments:

Post a Comment