என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Tuesday, January 31, 2012

கோண வாய வச்சிக்கிட்டு ரொம்ப ஆடுனே, கிழிச்சி தொங்க விட்டுருவேன்


மைனா’ தவிர்த்து பெரிதும் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் சாதிக்காத அமலாபால் போடுகிற ஆட்டங்களைச் சொல்லிமாளவில்லை.

படப்பிடிப்புக்கோ, ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிகளுக்கோ வரும்போது தனக்கு, அம்மாவுக்கு,அப்பாவுக்கு என்று பிஸினஸ் கிளாஸில் மூன்று டிக்கட்டுகளை பிடிவாதம் பண்ணி பெற்று விடுகிறார்.


நாளை நடைபெற இருக்கும் ‘காதலில் சொதப்புவது எப்படி?’ ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிக்காக இன்று சென்னை வந்த அமலாபாலிடம் ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான எல்ரெட்குமார், தன்பட புரமோசனுக்கும் சில டி. வி. சானல்களுக்கும் பேட்டி அளித்தால் நன்றாக இருக்கும் என்று வேண்டுகோள் வைத்தாராம். இதை வேண்டா வெறுப்பாக ஏற்றுக்கொண்ட அமலா கேர்ள், சொன்ன நேரத்தை விட 2 மணி நேரம் லேட்டாக வந்து சொதப்பினாராம்.


விவாகாரம் அதோடு முடியவில்லை. ‘’எங்கிட்ட ரெண்டு சேனல்னு சொல்லிட்டு மூனு பேரை வரச்சொலியிருக்கீங்க. என்னால அந்த சேனலுக்கு இப்போ பேட்டி தர முடியாது. அவங்கள உடனே வெளியே அனுப்புங்க ‘’ என்று சற்றும் நாகரீகமில்லாமல் கத்தியிருக்கிறார்.

இதைக்கேட்டு டென்சனான அந்த மூனாவது சேனல் நிருபர்,’’ இந்த டகால்டி வேலையெல்லாம் எங்கிட்ட வச்சுக்காத.இந்த கோண வாய வச்சிக்கிட்டு ரொம்ப ஆடுனே, கிழிச்சி தொங்க விட்டுருவேன் ‘என்று திட்டிவிட்டு, அங்கிருந்தபடியே சேனலின் நியூஸ் எடிட்டருக்கு போனில் பேச ஆரம்பித்தார்.

‘’சார் அவ நம்ம சேனலுக்கெல்லாம் பேட்டி குடுக்க மாட்டாளாம். அதுக்குப் பதில் பறவை முனியம்மா பேட்டி எடுத்துட்டு வர்றேன். இன்னும் கூட 100பேர் பாப்பாங்க சார்.

இப்படி ஒரு பதில் அட்டாக்கை சற்றும் எதிர்பாராத அமலா முனியம்மா லேசாக கலங்கித்தான் போனார்.

No comments:

Post a Comment