என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Tuesday, December 21, 2010

நினைவோடு வாழும் எனது நெஞ்சங்களுக்கு...

தோழனே... நீ செய்த ஒருநாள் தவறுக்கு....
பலநாள் தண்டனை எங்களுக்கோ?...


உனது விளையாட்டுக்களை இரசித்த...
என் கண்களுக்கு...
எப்படி சொல்வேன்... நீ சென்ற தூரம் மிக தொலைவு என்று...
உனது உரையாடல்களை கேட்ட...
என் செவிகளுக்கு...
எப்படி சொல்வேன்... நீ ஊமையாய் உறங்குகிறாய் என்று...
உன்னுடன் பழகிய...
எனது நெஞ்சத்திற்கு...
எப்படி சொல்வேன்.. நீ இறந்து, எரிந்து போனாய் என்று...
.எரிந்தது உனது உடல்....
இன்றும் என் கண்ணீரால் அணைக்க முயற்சிக்கிறேன்...
முடியவில்லை...
நினைவோடு நீ வாழ்ந்து கொண்டிருப்பதால்....

No comments:

Post a Comment